புதன், 25 ஜூலை, 2012

புனைவுத்திகள்


வெ. சஞ்சீவராயன்,
தமிழ்த்துறைப் பேராசிரியர்.
ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நல்லம்பள்ளி,  தருமபுரி.

புனைவு என்பது புலவன் கையாளும் இலக்கிய உத்திகளில் ஒன்றாகும். செய்திகளின் வெற்றுத்தொகுப்பு    இலக்கியம்    ஆகாது. கவிஞன்,    தன்காலத்துச் செய்திகளையோ பழைய காலத்துச் செய்திகளையோ கூறும்போது கற்பவரது    மனத்தில்    ஆழப் பதியும் வகையில் சுவைபடச் சொல்லுதல் வேண்டும். அதற்குத் துணைபுரிவதுதான் புனைவு என்னும் உத்தியாகும்.

சங்க அகநூல்களிலும் புறநூல்களிலும் உவமை, உருவகம், தன்மை நவிற்சி, கற்பனை, இயற்கை,  வருணனை,  உள்ளுறை,  இறைச்சி, உருக்காட்சி, அடைமொழி    ஆகிய    புனைவுகள் புலவர்களால்    திறம்படக் கையாளப்பட்டுள்ளன.    அவ்வகையில்,    அகநூல்களில் ஒன்றான குறுந்தொகையில்    இடம்பெறும்    புனைவுத்திகள் குறித்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புனைவு – சொற்பொருள் விளக்கம்

“புனைவு”  என்ற சொல் பழைய தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் வேறுவேறு வடிவங்களில் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.1   புனைவு, புனைதல் ஆகியன முறையே செய்கை, கை செய்தல்,  பண்ணுதல்    என்னும்    பொருள்களைத்    தருகின்றன.    இவையே அன்றி அலங்கரித்தல், எழுதுதல், தீட்டுதல், இயற்றுதல், கற்பித்துக் கூறுதல் ஆகிய பொருள்களும் இதற்கு உள்ளன.
இடத்திற்கேற்றவாறு இஃது அவ்வப் பொருள்களைக் காட்டும்.

பொருள்களை    உணர்த்துவதாய்ப் புனைதல் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
இத்தொழிற்பெயர் பெயரெச்ச வடிவிலும் வினையெச்ச வடிவிலும் இந்நூல்களில் அறியப்படுகிறது.

“செய்யுள் மொழியால் சீர் புனைந்து”2 “புதுவது புனைந்த யாப்பின் மேற்றே”3 “இன்னன புனைந்த நன்னடைத் தாகிக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப”4

“மாசில் பனுவல் புலவர் பாடிய
நாவில் புனைந்த நன்கவிதை மறாமை”5

எனவரும் மேற்கோள்கள் நோக்கத்தக்கன. அறிஞர் கருத்து
ஒருவரால்    புனையப்பட்டுக்    கற்பித்துக் கூறப்படும்    மொழிகள்,    ‘புனைந்துரை’  எனப்படும்.
இவ்வாறு உரைப்பதைக் கட்டுரை என்பர்.6  கற்பிக்கப்படுவதால் இது கற்பனை எனவும் பட்டது.
பழைய    நூல்களில்    இச்சொல்    பிற்காலத்துத்    திருமந்திர    நூலில்    காணப்படுவதாகச்    ச.வே.சுப்பிரமணியன்    குறிப்பிடுகிறார்.7   சங்க    இலக்கியங்களில்    தென்படும்.  புனை,  புனைவு என்னும்
சொற்கள் கற்பனை என்ற பொருளைச் சுட்டுவனவாகக் கொள்ளலாம் என்கிறார் ந. பிச்சமுத்து.8

கற்பனைச் சொல் அருவம், நினைவு, அறிவு, மனோபாவம்,கட்டளை, கற்பித்து மொழிதல்,
இட்டுக்கட்டி    உரைத்தல்,    கவிதையின்    ஊற்று    ஆகிய    பொருள்களைத்    தருவதாகச்    சான்றுகள்
காட்டி விவரிக்கினறார் ச.வே. சுப்பிரமணியன்.9

புனைவு வகைகள்

உள்ளது    புனைதல்,    இல்லது    புனைதல்    எனப்    புனைதல்    இருவகைப்படும்.    உலகில் மெய்யாக நிகழும் நிகழ்வுகளைப் புனைந்து கூறுதல் உள்ளது புனைதலாம். மெய்யாக நிகழும் உள்ளனவற்றிலேயே சிறிது இல்லனவற்றையும்     புனைந்துரைத்தல் இல்லது புனைதலாம்.10 எக்காலத்தும் இல்லாதனவற்றைப் புலவர்கள் கூறமாட்டார். ;ஆதலின், இல்லது புனைதல் என்பது இதனை உணர்த்தாது. இரண்டுமே கற்பித்துச் சொல்லப்படுவனவே. அகப்பாடல்கள் பெரும்பாலன
இல்லது புனைதல் வகையைச் சேர்ந்தவை. நாடக வழக்கு.
இலக்கியத்தில் பெரும்பான்மை மெய்மையும்    (உள்ளது),    சிறுபான்மை கற்பனையும் (இல்லது) விரவி வர வேண்டும் என்பது முன்னோர் கொள்கை. இல்லது கலவாமல் உள்ளதை மட்டுமோ அல்லது உள்ளது    கலவாமல்    இல்லதை மட்டுமோ கூறிச்    செல்வது சிறந்த இலக்கியமாகும். எனவேதான் தொல்காப்பியரும்,

“நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”11

என்றார் (நாடக வழக்கு - இல்லது@ உலகியல் வழக்கு – உள்ளது).

கவிஞன் உலகில் நிகழும் உண்மை நிகழ்வுகளை உற்றுநோக்கித் தான் உணர்ந்தவாறு அவற்றைக்    கூற    நினைத்தாலும்    கேட்பவனது    உள்ளத்தில்    இனிமையும் எளிமையும்    தெளிவும் பிறந்திட அவன் மேற்கொள்ளும் செயற்கையான படைப்பாக்க உத்திதான் புனைவு என்று முடிவு செய்யலாம்.

உவமைப் புனைவு

உவமை – ஒப்பு@ இஃது உவமம் எனவும்படும். இதுவரை அறியப்படாத பொருள் ஒன்றன்இயல்பைத்    தெளிவாக    அறிவிக்க,    முன்பு    நன்கறியப்பட்ட    வேறொரு    பொருளை    அதனோடு ஒப்புமைப்படுத்தி, ‘இது போல்வது அது’ எனச் சுட்டியுணர்த்துவது உவமையாகும். புதுமையான செய்திகளைப் புலவர்கள் கூறும்போது அவை மனத்தில் நன்றாகப் பதிவதற்கு இத்தகு உவமைப் புனைவு    என்னும்    உத்தியைக் கூறாது விட்டால்    அது உள்ளுறை    உவமமாகும்.    வாயின் சிவப்பைப் பவளத்தில் வைத்து உள்ளுறுத்து உரைப்பதுதான் இங்குக் கருத்தாகும்.
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் நுட்பமாக அறியத்தக்க வகையில் பாடல்களில்
இடம்பெற்றுள்ளது. ‘யாயா கியளே’21 எனத் தொடங்கும் பாட்டில்,

“பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்ப+ மென்சினைக் காஞ்சி ய+ரன் கொடுமை”

என்னும் அடிகளில் உள்ளுறை உவமம் காணப்படுகிறது. காஞ்சி மரத்துக்கிளை தன்னை உழவர் ஒடியுமாறு    வளைத்தாலும்    அதனைத்    தாங்கிக்கொண்டு    அவர்கள்மீது    பசிய தாதுக்களை வாரியிறைத்துதச் சிறப்புச் செய்வது போன்று புறவொழுக்கத்தால் தனக்குத் தலைவன் கொடுமை புரிந்தாலும்     அதனைப்பொறுத்து    அவன் வரவிற்கு மகிழ்ந்து    சிறப்புச்    செய்கின்றாள்    தலைவி என்பது உள்ளுறுத்துச் சொல்லப்படும் பொருளாகும்.

இறைச்சிப் புனைவு

இறைச்சி என்பது உள்ளுறை உவமத்தைக் காட்டிலும் நுட்பமான குறிப்புப் பொருளாகும்.
இதுவும்    கருப்பொருளின் அடியாகப்    பிறக்கும்.    எனினும், உவமை உவமேயம்    என்னும் அடிப்படையில்    இது    தோன்றாது. கருப்பொருளை    விரிக்கும்போது அதனினின்றும் கிளைக்கும் நுட்பமான  பொருள்தான் இறைச்சியாகும்.    இவ்விறைச்சியின்    இலக்கணத்தைத்    தொல்காப்பியர் மூன்று நூற்பாக்களில் சுட்டுகிறார்.

இஃது    உரிப்பொருளின்    புறத்தே    தோன்றும்    என்றும்,    இதனுள்    வேறொரு பொருள் பிறக்குமென்றும்22   அவர்    கூறுகிறார்.     மேலும்,        கருப்பொருள்களில் விலங்குகளும்    பறவைகளும் நிகழ்த்தும்    அன்பு    வாழ்க்கையைத்    தோழி        தலைவியை    வற்புறுத்தும்    குறிப்பினில்    இறைச்சிப் பொருளில் அமைத்துக் காட்டுதலும் செய்யுள் மரபு என்பர்.23 இதற்கு,

“நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே”24

எனவரும் குறுந்தொகைப் பாடல் எடுத்துக்காட்டாகும். தன்மை நவிற்சிப் புனைவு ஒரு    செய்தியை மிகைப்படுத்திக் கூறாமல்    அதன்இயல்பை உள்ளதை   உள்ளவாறே கூறுதல் தன்மைநவிற்சியாகும்.    இஃது    இயல்புநவிற்சி    எனவும்படும்.  சங்க இலக்கியத்தின் பெரும்பான்மையான பாடல்கள் இத்தகு நவிற்சியைப் பொருளாக உடையனவாம்.

“ஆம்பற் ப+வின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்”25 என்னும் குறுந்தொகைப்பாட்டுத் தன்மை நவிற்சிபட அமைந்ததைக் காணலாம். கற்பனை புனைவு
ஒரு    சாதாரண செய்தியை    எழில்படவும் சுவையுண்டாகவும்    சொற்களில் அமைத்துச் சொல்லுதல்தான் கற்பனையாகும்.     கற்பித்துச்சொல்லப்படுவதால் கற்பனை எனப்பட்டது. கற்பித்தல் - அழகும் சுவையும்பட எடுத்தியம்புதல். ‘அழகான முகம்’ என்ற எளிய செய்தியை,‘நிலவு முகம்’ எனக் கற்பித்துக் கூறினால் அது கற்பனையின் பாற்படும். இங்கு மாசுமறுவற்ற
முகம் முழுமதியாகக் கற்பித்துக் கூறப்படுகிறது. இலக்கியத்தில் முண்டகம் என்று சுட்டப்படும் முள்ளிச் செடியில் நிறைய முட்கள் இருக்கும். இக்கூரிய முட்களை அணிலின் கூர்மையான பற்களாகக் கற்பனை செய்கிறார் அம்மூவனார் என்னும் புலவர்.


“குறும்பல் சுனை”32 “கொடுவில் எயினர்”33 “வார்ந்ந்ந்த்த்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவை”34
“செங்காற் பல்லி”35 “பெருங்கை வேழம்”36 “கருங்கண் தாக்கலை”37 “துள்ளுநடைச் சேவல்”38 “சிறுகட் பெருங்களிறு”39 “பெருந்தோட் குறுமகள்”40

முடிவுரை

இதுகாறும்    மேற்காட்டிய    சான்றுகளால்    குறுந்தொகையின்    புனைவுத்தி    முறைகள்    புலப்படும்.
இலக்கியத்தின்    செவ்வியல்    தன்மைக்கு    இத்தகு    உத்திகளும்    துணைபுரிகின்றன.
இத்தொகைநூலின் புனைவுத்திமுறை தனித்தன்மை மிக்கதாக அமைதலை இச்சான்றுகள்
வாயிலாக உணரலாம். அடிக்கு;கு;குறிப்பு;பு;புகள்
1.    புனைதல்,    புனைதல்    வல்ல    கம்மியன்,    புனைதார்,    புனைந்த,    புனைந்து,    புனைந்துரை, புனைநர், புனைமாண் நல்லில், புனையவிரிழை, புனையா ஓவியம், புனையிருங் கதுப்பகம், புனைய+உ, புனைவில் நல்லடி, புனைவில் மேனி ஆகியன.
2.    தொல். பொருள். சூத். 537.
3.    மேலது, சூத். 540.
4.    தண்டியாசிரியர், தண்டியலங்காரம், சூத். 8.
5.    பரிபாடல், 6.
6.    கலித்தொகை, 14@ இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2:73-81.
7.    சுப்பிரமணியன், ச.வே., கம்பன் கற்பனை, ப. 22.
8.    பிச்சமுத்து, ந., திறனாய்வும் தமிழிலக்கியக் கொள்கைகளும்,
9.    ப. 84.
10. சுப்பிரமணியன், ச.வே., கம்பன் கற்பனை, பக். 23-26.
11. தொல். பொருள். சூத். 53, நச். உரை.
12. தொல். பொருள். சூத். 53.
13. மேலது, சூத். 279.
14. குறுந்தொகை, 18.
15. தொல். பொருள். சூத். 280. இளம். உரை.
16. மேலது, சூத். 280.
17. குறுந்தொகை, 17.
18. மேலது, 313.
19. தொல். பொருள். சூத். 295.
20. மேலது, சூத். 50.
21. மேலது, சூத். 51.
22. குறுந்தொகை, 10.
23. தொல். பொருள். சூத். 226.
24. மேலது, சூத். 227.
25. குறுந்தொகை, 37.
26. மேலது, 46.
27. மேலது,    49.
28. மேலது,    51.
29. மேலது,    110.

30. மேலது,    47.